முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 27 |
Untitled Document
| | 27. திருக்குறள் | 134 | | மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம் சிக்கலறக் காட்டிநலம் செய நூலாம் - மிக்க புகழ்ச் செந்தமிழ் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம். |
| | வேறு | 135 | | சங்கப் பலகையிலே - அன்று தனிய மர்ந்த நூலாம் பங்கய நான் முகனே - தமிழில் பகர்ந்த மாமறையாம். |
136 | | ஆதி மனுநூலைத் - திருத்தி அமைந்த நன்நூலாம்; நீதி எடுத்தோதப் - புவியில் நிகரி லாநூலாம். |
137 | | புத்தகக் காட்டினிலே - புகுந்து புத்தி மயங்குவதேன்? பத்தியோ டிந்நூலை - நிதமும் படித்தல் போதுமையா! |
138 | | ஓதி அறம் தெரிவீர் - பொருளின் உண்மை உணர்ந்திடுவீர்; காதலின் காட்சியெல்லாம் - நன்கு கண்டு களித்திடுவீர். |
| | 28. கம்பன் | 139 | | ஆரியம் நன்குணர்ந் தோன் - தமிழின் ஆழம் அளந்துகண் டோன்; மாரி மழைபோலக் - கவியின் மழைபொ ழிந்திடு வோன். |
140 | | அயன்ப டைப்பினையும் - திருத்தி அழகு செய்திடு வோன்; நயம்தெரிந்துகதை - நடத்தும் நாட கக்கவி ஞன். | |
|
|