பக்கம் எண் :

272கவிமணியின் கவிதைகள்

Untitled Document

1130   குட்டிச் சுவரெல்லாம் குதித்துச் சாடி
வாய்க்கால் வழியாய் வடக்கே யோடி,
ஒருவரும் காணாது ஓச்சன் குளத்து
மடைக்குட் சென்று மறைந்து கொண்டதும்,
'சாமி சுடலை சாம்பலி லாடி

1135   விளையா டுவதற்கு வேகமாய்ப் போகிறார்'
என்று நினைத்து அங்கிருந்தவ ரெல்லாம்
எழுந்து போனதும், எங்கும் தேடிக்
காணா தானதும், கடைசியில் உண்மை
தெரிய வந்ததும், செலவோடு செலவு என்று

1140   ஏழு ரூபாய் எண்ணிக் கொடுத்து
வாறண்டை அன்று மடக்கி விட்டதும்
நடந்த காரியமோ? நாடகந் தானோ?
வியாச்சியம், வேண்டாம், வியாச்சியம் வேண்டாம்;
தேடின முதலைத் தெருவில் வாரி

1145   இறைக்க வேண்டாம்; இறைக்க வேண்டாம்.
அல்லும் பகலும் அலுப்பில் லாமல்
ஆஆ என்று அலை ஆமீன் வாயில்
அகப்பட் டார்வெளி யாவது முண்டோ?
சுறா மீனையுமே தூக்கி விழுங்கும்

1150   பொல்லா மீன் இது போலோரு மீனைக்
கடலினும் கூடக் கண்டவ ரில்லை.
'எவரினும் பெரியவன் யானே ஆவேன்;
எப்பெரு வேலையும் எளிதில் முடிப்பேன்;
இம்மிரு கத்தையும் எடுத்தொரு நொடியில்

1155   வானெல்லாம் சுற்றி வருவதற் குள்ள
ஆற்றலு முடையேன்; ஆனால், அத்திறம்
அனைத்தையும் வெளிப்படை யாகக் காட்ட
அற்பமும் ஆசை என்கில்லை; அன்றியும்
உருவமோ நீளமோ உயரமோ கண்டே

1160   மூட உலகம் மோசம் போகும்;
ஆதலால் ஒருவரும் அறியா திருந்துஇந்