பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு297

Untitled Document
ஆசிய ஜோதி
1. புத்தர் அவதாரம்
1445 'வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்;
வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்;
மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டிநன்மை
விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன்.
1
1446 எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம்
எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்;
மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால்
மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்;
2
1447 இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு
எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும்
ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை;
உண்மைஈது எந்நாறும் உண்மை யாமால்.
3
1448 வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால்
வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு
யானுமொரு மகனாகச் செல்வேன்" என்றான்.
இமையவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ!
4
வேறு
1449 அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர்
அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையான்
எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்
எந்நாடும் எவ்வுயரும் இன்புறவே அம்மா!
வேறு
1450 ஆறு கதிரொளி செய்திடுமீன் - கண்ணுக்கு
அற்புதக் காட்சி அளித்திடுமீன்
ஏறும் அழகு பொலிந்திடுமீன் - திசை
எட்டும் ஒளிர ஒளிவிடுமீன்