| | ஆசிய ஜோதி | |
| | 1. புத்தர் அவதாரம் | |
1445 | | 'வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்; வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்; மெய்யிதுஎன்று உய்யுநெறி காட்டிநன்மை விளைவிப்பார் எவரையுமே கண்ணிற் காணேன். | 1 |
1446 | | எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம் எவ்வுடம்பின் எவ்வுயிருக்கும் இடர்க ளைந்தேன்; மண்ணுலகம் ஈடேற இன்னும் ஓர்கால் மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன்; | 2 |
1447 | | இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு எனக்குமில்லை; என்னைவழி பட்டு வாழும் ஒப்பரிய அடியவர்கள் எவர்க்கும் இல்லை; உண்மைஈது எந்நாறும் உண்மை யாமால். | 3 |
1448 | | வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால் வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு யானுமொரு மகனாகச் செல்வேன்" என்றான். இமையவரை நோக்கிஅருள் இறைவன் மாதோ! | 4 |
| | வேறு | |
1449 | | அந்நாளில் அவ்விரவில் சுத்தோத னப்பேர் அண்ணற்கு வாய்த்தமனை அலர்மங்கை யனையான் எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள் எந்நாடும் எவ்வுயரும் இன்புறவே அம்மா! | |
| | வேறு | |
1450 | | ஆறு கதிரொளி செய்திடுமீன் - கண்ணுக்கு அற்புதக் காட்சி அளித்திடுமீன் ஏறும் அழகு பொலிந்திடுமீன் - திசை எட்டும் ஒளிர ஒளிவிடுமீன் | |