Untitled Document | | அநுபல்லவி | | | | | பக்தர் பணியும் ஸ்ரீ பத்ம நாப னருளால் எத்திசையும் போற்ற இந்திரனைப் போல | (நித்தமும்) | | | சரணம் | | | | ஞாலம் புகழ வஞ்சியில் .- பொறுப்பாட்சி நாட்டில் நலம் கண்டவன், ஆலய வாசலை அனைவர்க்கும் திறந்தவன் மூலமன் சூடிய முடி சூடப் பிறந்தவன், சீலம் சிறந்தவன் சித்திரை மன்னவன் | (நித்தமும்) | | | 11. நல்ல உபதேசம் | | | இராகம் - செஞ்சுருட்டி | | | தாளம் - ஆதி | | | பல்லவி | | | 1795 | | நல்லது சொல்லுகின்றேன் மனமே! - இதையெந் நாளம் நீ நம்புவா யென் மனமே! | | | | கண்ணிகள் | | | | தில்லைப் பதிக்குச் செல்லுவேணும் - சென்று சிற்றம்பலம் சுற்ற வேணும்; அல்லும் பகலும் அதில் ஆடும் - ஈசன் ஆனந்த நடம் காணவேணும் | (நல்லது) | | | பைந்தமிழ்ச் சோலையிலே புகுந்து - நல்ல பரிமளம் வீசும் மலர் பறித்துச் சந்தமெழ மாலை கட்டி - அவன் தாளில் அணிந்து தொழுவேணும் | (நல்லது) | | | கன்றுக் கிரங்கும் பசுப்போல - அவன் கனிந்தருள் செய்திடுவான் மனமே! என்றும் அவன் ஆணையுண்டானால் - நமக் கேதும் கவலையில்லை மனமே! | (நல்லது) | |
|
|