பக்கம் எண் :

4கவிமணியின் கவிதைகள்

Untitled Document
    மிக்கோ ரென, சித்தி எட்டையும் பெற்றபின்
     மேலான வீடும்அடைவார்;
மேதினியில் இவ்வுண்மை அறியாத மாந்தரே
     வேறுதெய் வங்கள் பணிவார்;
பொக்கான எள்ளினை மிக்கவே ஆட்டினும்
     பூசுதற் கெண்ணெய் தருமோ?
பொய்யான தெய்வங்கள் ஒருகோடி போற்றினும்
     புண்ணியம் சிறிதும் உளதோ?
திக்கா றிரண்டோடு மிக்காறு பாய்கின்ற
     செய்யகஞ் சூழும் ஊராம்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
     தேவியழ கம்மை உமையே!


8. சந்ததிக் கேயென்ன என்னைப் பயந்திட்ட
     தந்தைதாய் செய்த தவமோ?
தலைநாளில் யான்செய்த புண்யமோ? அல்லதுன்
     தண்ணருட் பெற்றி தானோ?
சிந்தையுன் பெயரினொடு நாவுனது
     சீரையும் திரமென்று கொண்டு, நித்தம்
சீமாட்டி யென்றுனது கால்மாட்டி லேவந்து
     சென்னியும் பணிய நின்றேன்;
எந்தநாள் உள்ளமும் இரங்கிநீ ஆள்வையோ?
     எந்தவிதத் துய்கு வேனோ?
இவ்வுடலை இன்னமும் எடுத்தெடுத் துழல் வெனோ?
     யாதொன்றும் அறிகி லேனே;
செந்தமிழ் மணத்தினொடு செல்வர்மண முங்கொடைச்
     செங்கைக்கு மணமும் மாறாத்
தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே
     தேவியழ கம்மை உமையே!


9.   ஆங்காரி ஆனந்தி அம்பிகை நிரந்தரி
     அந்தரி ஆளி யூர்தி
ஆரணி சர்வபரி பூரணி நாரணி
     அயிராணி புயக வேணி