Untitled Document | | 36. கடிகாரம் | 240 | | சேவற் கோழியுண்டு காகமுண்டு - வானம் செக்கச் சிவந்து தெரிவதுண்டு; மேவு பொன்னே! அதி காலை தெரிந்திட வேறும் கடிகாரம் வேண்டுமோடி? |
241 | | செங்கதிர் பொங்கு வருவதுண்டு - நல்ல செந்தா மரைகள் மலர்வதுண்டு மங்கையே! காலைப் பொழுதை யுணர்ந்திட மற்றும் கடிகாரம் வேண்டுமோடி? |
242 | | தன்னிழல் தன்னடி யாவதுண்டு - சுடர் தானும் தலைநேர் எழுவதுண்டு; இன்னமுதே! பகல் உச்சியி தென்றிட ஏதும் கடிகாரம் வேண்டுமோடி? |
243 | | விண்மணி ஆழியில் வீழ்வதுண்டு - வாசம் வீசும் மந்தாரை மலர்வதுண்டு; கண்மணியே! மாலைக் காலம் குறித்திடக் கையில் கடிகாரம் வேண்டுமோடி? |
244 | | முல்லை யரும்பு விரிவதுண்டு - ஆம்பலின் மொட்டுகள் மெல்ல அவிழ்வதுண்டு; மெல்லியலே! மாலை வேளையறிந்திட வெள்ளிக் கடிகாரம் வேண்டுமோடி? |
245 | | அம்புலி நட்சத் திரங்களுண்டு - கணக்கு ஆக்கி யறிய வழிகளுண்டு; இன்பமே! நேரம் இரவில் அறிந்திட இன்னும் கடிகாரம் வேண்டுமோடி? |
246 | | கம்மென வாசம் கமழ்பாரி சாதம் - இக் காவில் மலர்ந்து சொரிவதுண்டு அம்மையே! நள்ளிர வீதென்று சொல்லிட ஆர்க்கும் கடிகாரம் வேண்டுமோடி? |
247 | | காலை மாலை எந்த வேளையும் - சூரிய காந்தி மலர்தானே காட்டிடாதோ? வேலை யெழுந்த திருவே! உனக்கினி மேலும் கடிகாரம் வேண்டுமோடி? | |
|
|