பக்கம் எண் :

434கவிமணியின் கவிதைகள்

Untitled Document
62. வெல்ல முடியாதோ?

இராகம் - அடாணா     தாளம் - ஆதி

பல்லவி
1846 வெல்ல முடியா தோ? - விதியையும்
     வெல்ல முடியா தோ?
அநுபல்லவி
அல்லும் பகலும் நின்
     றானாந்தக் கூத்தாடும்
தில்லைப் பெருமான்
     திருவருள் உண்டானால்
(வெல்ல)
சரணம்
காலனைக் காலாலே உதைத்தவன்,
     காய்ந்து புரமெரித்தோன்;
ஆலமண்ட கண்டன்
     அம்மை உமைபங்கன்
அம்புஜ பாதமே
     நம்பும் அடியர்க்கு
(வெல்ல)
63. கண்ணாரக் காணும் ஸ்வர்க்கம்

இராகம் - தன்யாஸி     தாளம் - ஆதி

பல்லவி
1847 கண்ணாரக் கண்டு மகீழ் - ஸ்வர்க்கம்
     கனக சபையல்ல வோ?
 
அநுபல்லவி
தண்ணார் மதிசூடும்
     சாம்ப சதாசிவன்
பெண்ணாளும் பாகன்
     பெருமான் அடியவர் (கண்)