| 473 | கருணானந்தர், கருவூர் தேவர் - இவர்கள் வைத்தியம் மந்திரவாதம் பற்றி நூற்கள் எழுதியவர்கள் |
| 479 | குளிகை - மாத்திரை |
| | லேகியம் - நக்கியுண்ணும் மருந்துவகை Electuary, |
| 481 | அஷ்டாங்கிருத வைத்தியர் - அஷ்டாங்கஹிருதயம் என்னும் வடமொழி சாத்திரம் அறிந்தவர். (ஆயுர்வேத வைத்தியர்) |
| 486 | கஷாயம் - திரவ நிலை மருந்து |
| 486 | வயக்கரை மூசு, வைத்திய ரத்தினம் - இவர்கள் திருவிதாங்கூரில் உள்ள பிரபல வைத்தியர்கள் |
| 493 | வெப்பை - சூட்டை |
| 498 | தீனம் - இங்கு காரணவஸ்தானத்தைக் குறிப்பது |
| 499 | ஆனைதின்ற விளாம்பழம் - விளா மரத்திற்கு வருகின்ற வியாதி ஆனை என்பது; இந்த நோய் வந்தால் விளாமரத்தின் காய்கள் பொக்காகிவிடும். |
| | யானை விளாம்பழத்தைத் தின்றவழியே அப்படியே விழும் என்பது வழக்கு.பின் பழத்தின் முழு ஓடும் சாணி |
| | வெளியே பார்க்கின்றபோது ஏதோ உள்ளேயிருப்பது போலவும்,உள்ளே நுழைந்து பார்த்தால் அங்கு எதுவுமில்லாது இருப்பதுவும் ஆகிய செயலைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் வழக்காறு. |
| 502 | குடும்ப தோஷி - குடும்பத்திற்குத் துரோகம் செய்தவன். |
| கருடாஸ்திரப்படலம் |
| 517 | கலியன் - கலி |
| 518 | என் மாமனார் - காரணவரின் மாமனார்; முந்திய காரணவர் |
| 525 | கொக்கு நோய் - நெற்பயிருக்கு ஏற்படும் ஒருவகை நோய் |
| 526 | குடியை - குடும்பத்தை |
| 527 | கார் - ஆவணி, புரட்டாசி மாதங்களில் விளையும் பயிர் பசானம் - மாசி பங்குனி மாதங்களில் அறுவடையாகும் பயிர |
| 529-30 | பிள்ளைப்பேறு - குழந்தைப்பேறு |
| 533 | ஆலடி மாடன் - ஆலமரத்தின் அடியில் உள்ள சுடலை மாடன் என்னும் நாட்டார் தெய்வம் |
| 534 | கொடை - நாட்டார் தெய்வ விழா |