பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு515

Untitled Document
566 காளம் - எக்காளம்
கருங்கொம்பு - ஓங்காரமாக ஒலிக்கும் ஒருவகை இசைக்கருவி
567 களியல் - கோலால் அடித்து ஆடப்படும் நாட்டார்நிகழ்த்துகலை.
வயதானவர்களின் இறப்புச் சடங்கு நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட கலை. பிண ஊர்வலத்தின் முன்னே களியலாட்டக்கார்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்வர்.
அசை  கம்புகள் - பிணத்தின் முன் நீண்ட கழிகளைக்
கையில்  பிடித்துக் கொண்டு ஆடிக்கொண்டு செல்லும்
நிகழ்ச்சிக்குரிய கழைகள். இக்கழைகள்   அசை கம்பு
எனப்படும்.
568 முரசு - நையாண்டி மேளத்துக்குரிய முரசு என்னும் தோலிசைக் கருவி.
572 பத்துச் சாக்கு - பத்துமூட்டை
573 அடுத்த கிழமை - ஒருவர்     இறந்த தினத்தை அடுத்து வரும்
ஞாயிறு அல்லது வியாழக்கிழமை
576 விளம்பவில்லையா - வினியோகிக்கவில்லையா
576 பதினாறு-இறந்து போனவர்க்குக்கருமாதிச்சடங்கு நடத்தும்நாள்.
இது பெரும்பாலும் இறந்ததினத்திலிருந்து தொடரும் 16 ஆவது
ஞாயிறு       அல்லது வியாழக்கிழமை அன்று நடத்தப்படும்.
579 கடுக்கன் - ஆண்கள் காதில் அணியும் சிறிய காதணி
580 பஞ்ச பாத்திரம் - பூசையின் போது அர்ச்சியம், பாத்தியம்,
ஆசமனீயம், ஸ்நாநீயம்,     சுத்தோதகம்என்பவைகளுக்கு
உபயோகிக்கப்படும் பாத்திரம்
581 அமுது படி-வேளாளரின் பதினாறாம்நாள் சடங்கில்பிராமணன்
எடுத்துச் சென்று         சமைத்துண்ணத் தரப்படும் அரசி
அல்லதுஅதற்கீடாகத் தரப்படும் பணத்தொகை
582 பசுவும் கன்றும் பிராமணனுக்குத் தானமாக வழங்கப்பட்டது.
பத்துமரக்கால் நிலம் - ஏறத்தாழ 50 செண்டு அளவுள்ள வயல்
587 படிப்புரை - ஓட்டுத்திண்ணை
படிக்கம் - வெற்றிலைச்    சாற்றை உமிழ்வதற்குரிய வாயகன்ற
பாத்திரம்
588 பத்திரகாளிபலி பீடம்  - பத்திரகாளி      என்னும் நாட்டார்
தெய்வத்தின பலிபீடம்  எப்போதும்  ரத்தம் பட்டு சிவப்பாக
இருக்கும்.அதுபோல் படிக்கம் பாத்திரத்திலும் வெற்றிலைச்சாறு
சிவப்பு நிறத்தில் நிரம்பியிருக்கும்.