முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 57 |
Untitled Document 372 | | நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக் குட்டி. | 373 | | முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி. |
| | 56. பொம்மைக் கலியாணம் | 374 | | பொம்மைக்கும் பொம்மைக்கும் கலியாணம் பூலோகமெல்லாம் கொண்டாட்டம்; பாவைக்கும் பாவைக்கும் கலியாணம், பகலும் இரவும் வேலையாம். | 375 | | கொட்டகை போடுது சிலந்தி; குறடு கட்டுது கறையான்; கோலம் போடுது நண்டு. | 376 | | கண்ணுக்குமை, காக்கை கூட்டுது; கழுத்துக்காரம், தத்தை கட்டுது; கொண்டைக்குப்பூ, கோழி வளர்க்குது. | 377 | | குயில்கள் இனிய குரலிற் பாடும்; மயில்கள் நல்ல நடனம் ஆடும். | 378 | | வண்டினம் எல்லாம் வந்துகூடி வாய்க்கினிய அமுதம் வைக்கும். | 379 | | ஊராரே? நீர் வாரீரோ? வந்து மணமும் காணீரோ? கண்டு வாழ்ந்திடப் போகீரோ? |
| | 57. எலிக் கலியாணம் | 380 | | எலிக்கும் எலிக்கும் கலியாணம்; இரவிலே சுப முகூர்த்தமாம். |
381 | | வீட்டெலி வந்தது, காட்டெலி வந்தது, வெள்ளெலி வந்தது, முள்ளெலி வந்தது, குண்டெலி வந்தது, சுண்டெலி வந்தது. |
382 | | எங்கெங்கு முள்ள எல்லா எலிகளும் கூட்டமாய்க்கூடி குதிலுள் நுழைந்தபின், நல்ல விருந்தேழு நாளாய் நடந்தது. | |
|
|