Untitled Document | | 65. ரக்ஷகர் | 458 | | அன்னியர் ஆட்சிலே - யூதர் அடைந்த துன்பமெல்லாம் பன்ன எளிதோ? அம்மா! - நினைக்கில் பதைக்குது உள்ளம்அம்மா! |
459 | | நீசர் சண்டாளர் - சற்றும் நெஞ்சினில் அச்சமில்லார் ஈசனுக்குரிய - பீடத்தில் ஏறி யிருந்துகொண்டார். |
460 | | உண்ண உணவுமின்றி - உழைப்புக்கு ஓய்வொரு நாளுமின்றிக் கண்ணீர் சொரிந்து நின்றார் - யூதர் கலங்கித் தட்டழிந்தார். |
461 | | அல்லும் பகலுமே - துயரில் ஆழ்ந்து மூழ்கிடினும், நல்ல காலம்வரும் - வருமென நம்பி நாள்கழித்தார். |
462 | | "இருள் ஒதுங்கிடவே - கதிரோன் எழுந்து கிள்ாவதுபோல், அருள் இறைமகனும் - நம்மை ஆள வந்திடுவான். |
463 | | உண்மை ஒளிவீசும்; - அப்போது உலகில் நீதியோங்கும்; அண்மையி லேநாமும் - நன்மை அடைவோம்" என்றிருந்தார். |
464 | | "அருங்கு ணச்செல்வன் - புவியில் அவத ரித்திடுநாள் நெருங்கி வந்ததிதோ! - மிகவும் நெருங்கி வந்ததிதோ! |
465 | | வருவீர் வருவீரே - எவரும் வருவீர்" என்றுநலம் மருவு காலிலிமா - நகரிலோர் வார்த்தை கேட்டதம்மா! | |
|
|