முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 9 |
Untitled Document | | வேறு | 21. | | சின்னஞ்சிறிய மலர்,இந்தச் சிறிய மலரைக் கொய்திடுவாய் இன்னுங் காலஞ்செல்லின்,ஒளி இழந்து வாடி விழுந்திடுமே |
22. | | ஐயனே!நீ அணிமாலைக்கு ஆகா மலரேயானாலும் செய்ய உன்றன் திருக்கரத்தால் தீண்டும் பெருமை அளிப்பாயே |
23. | | நேரம் இருண்டு போய்விடுமோ? நியமப்பூசை தவறிடுமோ? ஒரும்உள்ளம் அயர்கின்றேன் உண்மை அறியா துழல்கின்றேன் |
24. | | மணமும் நிறமும் இல்லாவோர் மலரே எனினும்,ஐயா நின் பணியிற் சேரத் தாழாது பறித்துக் கொள்ள வேண்டினனே |
25. | | உன்னிடத்தில்லன்றி,உலகில் எவரிடம்போய், என்னுடைய சங்கடத்தை யானுரைப்பேன்-பன்னிருகை ஏந்துமெழில் செந்தில் இறைவா!உனையன்றி ஆந்துணை வேறுண்டோ ஐயா? |
26. | | தண்டனை போதுமைய! தாங்கமுடியாதையா! கொண்டபிணி நீங்கவருள் கூரையா!-கண்டுனது வாசலில் வந்து,வணங்கவலி இல்லைஐயா! ஈசனே!செந்திலிறைவா! |
27. | | பண்டிதரும் கைவிட்டார்;பத்தியமும் தீர்ந்தது;யான் உண்டமருந் தால்குணமோ ஒன்றுமில்லை-அண்டர் அமராவதிகாத்த அண்ணலே!செந்தில் குமரா!எனையாண்டு கொள் | |
|
|