முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 93 |
Untitled Document
586 | | இந்தக் கருவியெல்லாஞ் சேர - நீதான் எவ்வா றமைந்தனை? என் குழந்தாய்! எந்தை இறைவன்உளங் கொண்டான்; உடன் யானும் எழுந்துநின்றேன், அம்மா! |
587 | | மனமிக மகிழ்ந்திடக் குழந்தாய்! - நீயென் மடியினில் வந்தவகை எதுவோ? தினமும்நீ செய்தபெருந் தவத்தால் - அந்தத் திருவருள் கூட்டிவைத்த தம்மா! |
| | 77. முதல் துயரம் | 588 | | முல்லை பூத்த தம்மா! - இருவாட்சி மொட்ட விழ்ந்த தம்மா! மல்லி கைப்பூவும் - மலர்ந்தநல் வாசம் வீசு தம்மா! |
589 | | தும்பி பாடுதம்மா! - கிளிபயில சோலை தேடு தம்மா! தம்பி எங்கே? அம்மா! - விளையாடத் தனியே நின்றேன், அம்மா! |
590 | | படரும் முந்திரியில் - கனிமிகப் பழுத் துதிரு தம்மா! தொடரும் வேனிலும் - நமக்கிங்கே தொடங்கி விட்ட தம்மா! |
591 | | சின்னஞ் சிறுபிஞ்சு - வெள்ளரியில் செழித் திருக்கு தம்மா! கன்னிக் காய்பறிக்கத் - தம்பியையும் காணோமே, அம்மா! |
592 | | அம்பொன் மாலைகள் - செடிபல அணிந்து நின்ற, அம்மா! தம்பி இல்லாமல் - அழகவை தருவ தில்லை, அம்மா! |
593 | | புனைந்த சித்தரம்போல் - வண்ணத்திப் பூச்சி சுற்று தம்மா! துணைவன் இல்லாமல் - யானும் அதைத் தொடர்ந்து செல்லேன், அம்மா! | |
|
|