பக்கம் எண் :

நீ தொடங்குகிறாய்;

“ஊருக்குப் போகிறேன்;
உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா?”

“ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்”

“அப்படியானால்
அதற்குப்பின் சங்கடமாயிருக்காதோ?
சரியாய்ப் போய்விடுமோ,”
-நீ ஊடிப் பிணங்குகிறாய்.

“அதற்குப் பின்தான்
நீயே வந்து விடுவாயே..
இரண்டு நாட்களுக்கு மேல்
என்னைப் பிரிந்து உன்னால்
இருக்க முடியாதே”
-நான் உன் ஊடலை அணைக்கிறேன்.

உன் முகம்
பௌர்ணமிப் புன்னகை சிந்துகிறது.

60