பக்கம் எண் :

உலகபந்தம் என்னும்
ஒரு சக்தியின் பிடியிலிருந்து
மீற முடியாமல் - அதே நேரத்தில்
மீற வேண்டும் என்னும்
வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல்
தவிக்கும் ஓர் ஆன்மா,
ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை
அள்ளி அணைக்கும்
ஆர்வ வெறியில் அலைகிறது.
ஆனால்...அந்தப் பேரழகு
அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது.
ஆன்மா துடிக்கிறது.
அந்தத் துடிப்பின்
அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.