பக்கம் எண் :

14

பின்னால் இருந்த
என் மடிச் சந்தில்
லந்து விழுந்தது.....
மாற்றான் தோட்டத்து
மல்லிகை
ஓடும் பேருந்தில் !
 

போன்ற ரச பேதங்களிலும்

இதுதான் வேலை
மல்லாந்து படுத்து
சிகரெட் புகையை
ஊதி ஊதித் தள்ளும்
எங்கள் ஊருக்கு வந்த
புதிய சிமெண்ட் ஆலை.
 

போன்ற நறுக்குகளிலும் மீராவின் தனிப் பார்வை புலப்படுத்துகிறது.

குக்கூ    எனக்   கூவும் இந்தக் கவிதைகள் மீராவின் மௌனத்தை மட்டும் கலைக்கவில்லை.   தமிழ்க்   கவிதை உலகில் நிலவும் பேச்சற்ற பிடிவாத மௌனத்தையும் கலைக்கும் என எதிர் பார்க்கலாம்.

பாலா
28-01-02
தங்கல் : தஞ்சை