பக்கம் எண் :

                 நந்தன் ஐந்தாம் வகுப்பு.
                    நானோ ஆறாம் வகுப்பு.
                
ஐந்து பேரும் என்னை
                    அண்ணா என்றே அழைப்பார்.

               
சுட்டுப் பொசுக்கும் வெயிலில்,
                    சுழற்றி அடிக்கும் காற்றில்
              
 கொட்டும் மழையில் கூட
                    கூடி நாங்கள் செல்வோம்.

              
 படித்துப் படித்து மேலும்
                    பட்டம் பலவும் பெறுவோம்.
               
படித்து முடித்த பின்னர்
                    பலரும் போற்ற வாழ்வோம்  

 
108