பக்கம் எண் :

     உண்மைதான் !


         
தங்கைப் பாப்பா மீனா.
          சமர்த்துப் பையன் நானே.
          சின்னக் கண்ணன் எங்கே?
          சிரிக்கும் முருகன் எங்கே?


   எங்கே என்றா கேட்கிறீர்?
   இங்கே வந்து பாருங்கள்.
   எங்கள் பூசை அறையிலே
   இருக்கி றாரே இருவரும் !
   அம்மா தினமும் சொல்லுவாள்
   அவர்கள் தெய்வக் குழந்தைகள்!

 

 
110