பக்கம் எண் :

தாத்தாவும் பேரனும்

                             

          

தாத்தா


                
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
                    
தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு
                 ஆற்றைக் கூடக் கடந்து சென்று
                    
அடுத்த நகரில் படித்து வந்தேன்

                                       
அந்தக் காலம்-அது
                                        அந்தக் காலம்.


                
காட்டு வழியைக் கடந்து சென்று
                   
கனத்த மழையில் நனைந்து கொண்டு
                 வீட்டை நோக்கி இரவில் வருவேன்
                   
விளக்கே இல்லா வீதி வழியே

                                     
அந்தக் காலம்-அது
                                      அந்தக் காலம்.
    

 
119