பக்கம் எண் :

             சீரு டையை அணிந்து கொண்டு
              
செல்வர் என்றும் ஏழை என்றும்
            வேறு பாடே ஏதும் இன்றி
              
விருப்ப மோடு படித்து வருவேன்

                                 
இந்தக் காலம்-இது
                                  இந்தக் காலம்.


            இலவ சமாய்க் கல்வி உண்டு
             
 இருந்து படிக்க வசதி உண்டு
            கலக்க மின்றிக் கவலை யின்றிக்
              
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்

                                
இந்தக் காலம்-இது
                                 இந்தக் காலம்.


           பென்சில், நோட்டு, தேவை யான
             
புத்த கங்கள் போன்ற வற்றை
           அன்ப ளிப்பாய்ப் பெற்று நானும்
             
ஆர்வத் தோடு கற்று வருவேன்

                                
இந்தக் காலம்-இது
                                 இந்தக் காலம்.


          இன்னும் நிறையக் கல்வி கற்று
            
இனிய முறையில் தொழிலும் கற்று
          நன்மை செய்வேன், நமது நாடு
            
நன்கு வளர, நானும் வளர்வேன்.

                              
 இந்தக் காலம்-இது
                                இந்தக் காலம்.

 
121