பக்கம் எண் :

                   முத்து மாரி அம்மனுக்கு
                     
மிகமிகச் சீருடன் சிறப்பாகப்
                   பத்து நாட்கள் திருநாளாம்;
                     
பலரும் பார்த்து மகிழ்வாராம்

                   கணித மேதை கதிரேசர்
                     
கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே
                   புனித மான காந்திமகான்
                     
பெயரில் பள்ளி நிறுவினரே.

                   பொன்னாச் சியெனும் ஊருணியின்
                    
 பொன்னைப் போன்ற நிறமுள்ள
                   தண்ணீர் உண்டு; ஊர்மக்கள்
                      தாகம் தீர்க்கும் குணமுண்டு.

                   வாரச் சந்தை புதன்கிழமை;
                     
வருவார் மக்கள் திரளாக.
                   கீரை முதலாய் அரிசிவரை
                     
கிடைக்கும் அந்தச் சந்தையிலே!

                   அம்மன் கோயில் முன்னாலே
                     
ஆடிப் பாடித் தோழருடன்,
                   சின்ன வயதில் திரிந்ததனை
                      
எண்ணும் போதே இனிக்கிறதே!

                                              கதிரேசர்
 

 
123