மனிதனும் தேனீயும்
மனிதன் :
தேடிச் சென்று பூவிலே
தேனை எடுக்கும் ஈயே வா.
ஜாடி நிறையத் தேனையே
தருவேன்; குடித்துச் செல்லுவாய்.
தேனீ :
என்னைப் போலத் தினம்தினம்
ஈக்கள் தேனை எடுத்தன.
கொண்டு வந்து கவனமாய்க்
கூட்டில் சேர்த்து வைத்தன.
கூட்டைக் கலைத்தே ஈக்களைக்
கொன்று விட்டுத் தேனையே
வீட்டில் சேர்த்து வைக்கிறீர்.
விருந்து தரவா அழைக்கிறீர் ?
எத்திப் பிழைக்க நானுமே
எண்ண மாட்டேன். ஆதலால்,
புத்தம் புதிய தேனையே
பூவில் எடுக்கப் போகிறேன்.
|