பக்கம் எண் :

 மனிதனும் தேனீயும்

மனிதன் :


                    
தேடிச் சென்று பூவிலே
                        தேனை எடுக்கும் ஈயே வா.
                    
ஜாடி நிறையத் தேனையே
                        தருவேன்; குடித்துச் செல்லுவாய்.

 

தேனீ :


                    
என்னைப் போலத் தினம்தினம்
                      
 ஈக்கள் தேனை எடுத்தன.
                     கொண்டு வந்து கவனமாய்க்
                       
கூட்டில் சேர்த்து வைத்தன.

                     கூட்டைக் கலைத்தே ஈக்களைக்
                       
கொன்று விட்டுத் தேனையே
                     வீட்டில் சேர்த்து வைக்கிறீர்.
                       
விருந்து தரவா அழைக்கிறீர் ?

                     எத்திப் பிழைக்க நானுமே
                       
எண்ண மாட்டேன். ஆதலால்,
                     புத்தம் புதிய தேனையே
                       
பூவில் எடுக்கப் போகிறேன்.
 

 
134