பக்கம் எண் :

                கழுகுக் காட்சி

                
 திருக்கழுக் குன்ற மலையினிலே
                    
தினமும் உச்சி வேளையிலே
                  அருமைக் காட்சி கண்டிடவே
                    
அங்கே மக்கள் கூடுவரே.

                  வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
                    
வருகை தன்னை நோக்கிடுவர்;
                  ஏனோ இன்னும் வரவில்லை?
                    
என்றே சிலரும் ஏங்கிடுவர்.

                  சட்டென வானில் இருகழுகு
                    
வட்டம் போடும் காட்சியினைச்
                  சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
                   
 துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.

 
155