பக்கம் எண் :

                எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
                  ஆலம் விதைகளில்
               
இரண்டு வாரம் சென்ற பின்னர்
                   ஒன்று முளைத்தது.
               
உச்சி வெய்யில் தலையில் விழவே
                   நடந்து சென்றவர்
               
ஒருவர் அந்தச் செடியைக் கண்டே
                   உள்ளம் மகிழ்ந்தனர்.

               
ஆடு மாடு கடித்தி டாமல்
                   வேலி போட்டனர்.
               
அவரே தினமும் மாலை நேரம்
                   தண்ணீர் விட்டனர்.
               
பாடு பட்டே அந்தச் செடியை
                   வளர்த்து வந்ததால்
               
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
                   வளர்ந்து விட்டது.

              
 கோடை நாளில் குடையைப் போல
                   நிழலைத் தந்திடும்.
               
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
                   என்றும் உதவிடும்.
               
ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
                   அரங்க மாகிடும்.
               
அருமை யான ஊஞ்ச லாக
                   விழுது மாறிடும்.

 
161