பக்கம் எண் :

கந்தனின் மாடு 


                   
மாட்டு வண்டி ஒன்றிலே
                      
மூட்டை நெல்லை ஏற்றியே
                    காட்டு வழியாய்ச் சென்றனன்
                     
 கந்தன் என்னும் நல்லவன்.
 
                    ஒற்றை மாட்டு வண்டியை
                      
ஓட்டி அவனும் செல்கையில்
                    சட்டென் றெதிரே வேகமாய்த்
                     
 தாவி வந்தான் திருடனே !

                   “மாட்டை இழுத்து நிறுத்திடு.
                      
வண்டிக் குள்ளே இருந்திடும்
                    மூட்டை நெல்லை இறக்கிடு”
                       
மிரட்ட லானான் திருடனும்.

 
166