பக்கம் எண் :

     செடியும் சின்னத் தம்பியும்


                    
சின்னச் செடியை நட்டுநான்
                          தினமும் தண்ணீர் ஊற்றினேன்.
                     நன்கு செடியும் வளர்ந்தது;
                          நான்கு மீட்டர் உயர்ந்தது!


                    
சின்னத் தம்பி சேகரும்
                          செடிபோல் வளர வில்லையே!
                     இன்னும் குள்ள மாகவே
                          இருக்க லாமோ? ஆதலால்,


                    
சிறுவன் அவனைத் தினமுமே
                          செடியின் அருகில் நிறுத்தியே
                     தண்ணீர் விட்டேன் நாலுநாள்.
                        
 சளி பிடித்துக் கொண்டதே!

 
188