பக்கம் எண் :

பாடுவேன், ஊதுவேன்

 


                    
பாட்டுப் பாடுவேன்-நான்
                    
பாட்டுப் பாடுவேன்.
                     பலரும் புகழ, இனிய தமிழில்
                    
பாட்டுப் பாடுவேன்.
                     கேட்டு மகிழவே-நீங்கள்
                    
கேட்டு மகிழவே,
                     கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
                     கீதம் பாடுவேன்-நான்
                     கீதம் பாடுவேன்.

                   
 குழலை ஊதுவேன்-புல்லாங்
                    
குழலை ஊதுவேன்.
                     கோகு லத்துக் கண்ணன் போலக்
                     குழலை ஊதுவேன்-நான்
                   
 குழலை ஊதுவேன்.
                     அழகாய் ஊதுவேன்-மிக்க
                    
அழகாய் ஊதுவேன்.
                     அனைவர் மனமும் மகிழும் வகையில்
                     அழகாய் ஊதுவேன்-நான்
                   
 அழகாய் ஊதுவேன்.
                                                    

 
55