பக்கம் எண் :

அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.

ஐம்பதடி தூரத்திலே
முன்னாலே பார்த்தான்.

அசைந்தசைந்து நடந்துவரும்
ஆனையைப் பார்த்தான்

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.

ஐம்பதடி தூரத்திலே
பின்னாலே பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்

ஆடிப்பாடி ஓடிவரும்
அலமுவைப் பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்

அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.

அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.

அலமு, யானை, பட்டமெல்லாம்
கண்ணாலே பார்த்தான் !
58