பக்கம் எண் :

                 ஆடி அசையும் பூக்கள்-நான்
                    அருகில் சென்று பறிப்பேன்.
                
கூடை நிறைந்து போகும்-நான்
                     கொய்த மலர்கள் சிரிக்கும்.

                
பார்க்கும் போதும் சிரிக்கும்-நான
                      பறிக்கும்போதும் சிரிக்கும்.
                
சேர்த்துக் கட்டும் போதும்-அவை
                      சிரித்துக் கொண்டே இருக்கும் !

                
கண்ணன் சிலைக்குப் போட-நான்
                     கட்டி வைத்த பூக்கள்
                
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என்
                     சின்னத் தம்பி போல !

 
82