பக்கம் எண் :

                   வேறு வேறு மொழிகள் பேசும்
                      மக்க ளாயினும்
                  
வெறுப் பில்லாமல் விருப்ப மோடு
                      கூடி வாழ்பவர்.

                  
சீரும் சிறப்பும் பெற்று நமது
                      நாடு திகழவே
                  
திட்ட மிட்டு வேலை செய்யும்
                      திறமை மிக்கவர்.

                 
 புத்தர், காந்தி, நேரு பிறந்த
                      நாட்டில் பிறந்ததைப்
                  
பெருமை யாக எண்ணி மேலும்
                      பெருமை சேர்ப்பவர்.

                  
இத்த லத்தில் பார தம்போல்
                      இல்லை எங்குமே
                  
என்று சொல்லும் நல்ல நாளைக்
                      காணத் துடிப்பவர்.

 
92