பக்கம் எண் :

118நாமக்கல் கவிஞர் பாடல்கள்

வெஞ்சின வசைகள் கோத்து
       விட்டன பாணம் எல்லாம்
பஞ்சினிற் பட்ட வேல்போல்
       பயனற, ராஜா ஜீயோ
கொஞ்சமும் கோப தாபக்
       குறியிலாக் குணக்குன் றானான்.       2

பொதுநலம் ஒன்றே யன்றிப்
       புகழ்ச்சியில் மயங்க மாட்டான்;
எதுநலம் என்ற பேச்சில்
       எதிர்ப்புகள் எதற்கும் அஞ்சான்;
மதிநலத் தெளிவு கொண்ட
       மாபெரும் கர்ம யோகி
துதிபெறத் தமிழர் மேன்மை
       துலக்கினோன் ராஜா ஜீயே.       3

வேங்கைகள் சூழ்ந்த மான்போல்
       விடுபட வழியில் லாமல்
தீங்குகள் சுற்றி நின்று
       திடுக்கிடச் செய்த போதும்
ஆங்குமான் கல்லோ! என்ன
       அசைவிலா உறுதி காட்டும்
பாங்குளான் ராஜா ஜீயே;
       பகைவரே பணியும் பண்பன்.       4

தாழ்ந்தவர் உயர்ந்தோர் என்று
       ஜாதியால் குறித்தல் பாபம்
மாந்தருள் தீண்டல் என்றல்
       மடைமையுள் மடமை என்று
காந்தியை நாமெல் லாரும்
       காண்பதன் வெகுநாள் முன்பே
சாந்தமாய் வாழ்க்கை தன்னில்
       சாதித்தோன் ராஜா ஜீயே.       5