தீமையை எதிர்க்கும்ஒரு தீரனுளன் என்றும் வாய்மையை வளர்க்குமொரு வள்ளலிவன் என்றும் தூய்மைதவ றாத முறை சொல்வளவன் என்றும் சீமைதொறும் வாழ்த்துஜவ ஹர்அரிய சீலன். 3 சொந்தமுள தன்னுடைய சொத்துசுக மெல்லாம் வந்தநில மக்கள்சுக வாழ்வுபெற வென்றே தந்தைதர மைந்த னிவன் தானமெனத் தந்தான் எந்தமொழி எந்தக்கதை ஈடுசொல உண்டு? 4 தன்னல மறுப்பினுயிர் தன்மையிது வென்ன இன்னல்களை இன்பமென ஏற்க ஒளிமின்னும் பொன்னில்மணி வைக்க உயிர் பெற்றசிலை போலும் என்னசொலிப் போற்றிடுவோம். எம்ஜவஹர் லாலை! 5 ஏழையின் மனக்குறைகள் இன்னவெனக் காட்டிக் கோழைகளைக் கண்டுகொதி கொண்டதுயர் கூட்டி ஊழ்வினையை வெல்லுமொரு ஓவியமும் ஆகும். |