பக்கம் எண் :

124நாமக்கல் கவிஞர் பாடல்கள்

IV. இசைப் பாடல்கள்

65, சத்தி தோத்திரம்

பல்லவி


சத்தி எனக்கே அருள்வாய் - பரா
சத்தியென் தாயுனை நித்தமும் தொழுதனன்.       (சத்தி)

அநுபல்லவி

பத்தியோ டுன்றனைப் பணிந்திடல் மறந்தேன்
       பாரினிற் சுகமெல்லாம் நீயெனத் தெரிந்தேன்
இத்தின முதலுன்றன் இணையடி புரிந்தேன்
       இனிமேற் பிணியில்லை கவலைகள் துறந்தேன்!       (சத்தி)

சரணங்கள்

நோய்களைத் தடுத்திட நுண்ணிய அறிவும்
       நொந்தவர் தங்களைக் காத்திடப் பரிவும்
மாய்வதைக் குறைத்திட மருந்துகள் முறிவும்
       மந்திர தந்திர மணியவை தெரியும்.       (சத்தி)1

கல்லினும் கட்டுடைய தேகம்எற் கருள்வாய்
       காலனை ஜெயித்திடும் கருணையும் தருவாய்
சொல்லிலும் செயலிலும் தூய்மையைத் தருவாய்
       சோம்பலை யோட்டிதற் சுகமெனக் கருள்வாய்.       (சத்தி)2

புண்ணிய பாவமென்றன் இச்சையிற் கடந்தே
       பூதங்கள் ஐந்துமென் சொற்படி நடந்தே
எண்ணிய யாவுமென்றன் இஷ்டப்படி முடிய
       ஈன்றவ ளேஉன்றன் அருள்வரத் தடையோ?       (சத்தி)3

66. ஒரு நாளைக்கு ஒரு தரம்

பல்லவி

ஒரு நாளைக்கு ஒருதரம்
       ஒரு நொடிப் பொழுதேனும்