பக்கம் எண் :

புலவர் சிவ. கன்னியப்பன் 15

I.கடவுள் வாழ்த்து

1. பரமன்

உலகெலாம் படைத்துக் காத்தே
       உருவிலா தழித்து நாளும்
உண்மையாய் எண்ண மாளா
       ஒருவனாய் அருவ னாகிச்
சலமிலா தெண்ணு வோர்க்குச்
       சத்திய மயமே யாகித்
தனித்தனி பிரிந்த போதும்
       தானதிற் பிரியா னாகி
மலரின்மேல் தேவ னாகி
       மாதொரு பாக னாகி
மாலொடு புத்த னாகி
       மகமதாய் ஏசு வாகிப்
பலபல தெய்வ மாகிப்
       பற்பல மதங்க ளாகிப்
பக்குவப் படியே தோன்றும்
       பரமனார் பெருமை போற்றி.

2. கடவுள்

இல்லாத கால மில்லை
       இருக்கின்ற பொருள்ஒன் றில்லை
எண்ணாத எண்ண மெல்லாம்
       எண்ணியும் எட்ட வில்லை
சொல்லாத வேத மெல்லாம்
       சொல்லியும் சொன்ன தில்லை