துன்பங்கள் வந்திட் டாலும் துணுக்குற மாட்டான்; மற்றும் இன்பங்கள் எய்தி னாலும் இச்சித்து மயங்க மாட்டான்; பின்பவன் ஆசை, அச்சம் பிணைந்துள்ள சினமும் நீங்கும்; தென்புள்ள முனிவ னாகித் திடமுற்ற அறிஞன் ஆவான். 3 நல்லது வந்த போதும் நசைதரும் மகிழ்ச்சி கொள்வான்; அல்லது கெடுதி வந்தால் அருவருப் படைய மாட்டான்; தொல்லைய விருப்பி னோடு வெறுப்பையும் துறந்தோன் என்னும் வல்லவன் அவனே யாகும் வலிவுள்ள அறிவு வந்தோன். 4 தலைஒன்று, கால்கள் நான்கு, ஐந்தையும் தனக்குள் ளேயே நிலைபெற இழுத்துக் கொள்ளும் ஆமைபோல் நினைத்த வாறே அலைதரும் புலன்கள் ஐந்தும் தன்னுளே அடக்கி ஆளும் கலைதெரிந் தவனே யாகும் கலங்கிடா அறிவு கண்டோன். 5 தம்மிடம் மோகம் கொள்ளா ஜீவரை விட்டுத் தாமே வெம்மைய விஷயம் எல்லாம் விலகிடும் எனினும் முன்னே |