கலக மின்றிச் சட்ட திட்டக் கட்டுப் பாடும் இன்றியே கவலை யற்ற சமர சத்தின் காட்சி காண நன்றிதே. 4 காந்திதர்ம நெறியைக் காக்கக் கடவு ளிட்ட கட்டளை கருணை யோடு பூமி தானம் செய்யக் கோரும் திட்டமே; ஆய்ந்து பார்க்கின் உலகில் எங்கும் அமைதி யற்ற காரணம் அவர வர்க்கு நிலமி லாத ஆத்தி ரத்தின் பேரில்தான். 5 தானதர்ம ஆசை யேநம் தமிழ கத்தின் கல்வியாம்; தந்து வக்கும் இன்ப மேநம் தலைசி றந்த செல்வமாம்; தீனருக்குப் பூமி கொஞ்சம் தான மாகத் தருவதால் தேச மெங்கும் அமைதி பெற்றுத் திருவி லாசம் பெருகுமே. 6 கும்பி வேகும் பசிமி குந்த கோப தாபம் எண்ணவே கொடுமை சேர்பு ரட்சி வந்து கொள்ளை போகு முன்னமே அன்பி னோடு பூமி தானம் ஆன மட்டும் செய்வதே அச்ச மின்றி நாட்டில் எங்கும் அமைதி பெற்றே உய்வதாம். 7 விளைவுமுற்றும் சொந்த மாகும் விளைநி லங்கள் தந்திடில் |