பொங்கல்
வெள்ளை யெல்லாம் அடித்து வைத்து,
வீட்டை நன்கு மெழுகி வைத்து,
விடியும் போதே குளித்து விட்டு,
விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து,
கோல மிட்ட பானை தன்னில்
கொத்து மஞ்சள் கட்டி வைத்து,
அந்தப் பானை தன்னைத் தூக்கி,
அடுப்பில் வைத்துப் பாலை ஊற்றிப்
பொங்கிப் பாலும் வருகை யிலே
‘பொங்க லோபால் பொங்க’ லென்போம்.
தேங்கா யோடு கரும்பும், சோறும்
தெய்வத் துக்குப் படைத்து வைத்து.
ஒன்று சேர்ந்து உண்டி டுவோம்;
ஓடி ஆடிப் பாடி டுவோம். |