| 15. இசைத்திறம் உணர எழுந்த காதை | 
                  |  | 
                  | அடிகளார் ஆணை | 
                  |   | பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள்
 `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால்
 ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்
 |  | 
                  |  | சுவடியின் துணையால் தொண்டியற் றென்று | 5 | 
                  |  | தவறிலா அடிகள் சாற்றினர்' என்றனள்; |  | 
                  |  |  |  | 
                  |  | அருண்மொழியும் இசைதல் |  | 
                  |  |  |  | 
                  |  | `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை துலங்குதல் வேண்டி
 மீண்டும் அப்பணி மேவுதல் வேண்டும்;
 |  | 
                  |  | பூண்டநல் லன்பரைப் பூரியர் கொலைசெய | 10 | 
                  |  | ஈண்டிய துயரால் இசைத்தொழில் துறந்தோம்; இவ்வணம் நம்மனோர் இசைப்பணி வெறுத்திடின்
 செவ்விய அவ்விசை சீருறல் யாங்ஙனம்?
 துயரால் துறத்தல் தன்னல மாகும்
 |  | 
                  |  | அயரா உழைப்பால் அப்பணி புரிகுவம் | 15 | 
                  |  | எண்ணி எண்ணி இம்முடி பேற்றேன்; அண்ணலும் அம்முடி பறைந்தன ராகலின்
 இன்னே அதனை இயற்றுதல் வேண்டும்;
 கொன்னே வாழ்நாள் குறைவது கண்டோம்
 |  | 
                  |  | விழுங்கி உறங்கிப் பிணியால் மூப்பால் | 20 | 
                  |  | விழுந்து மாய்தல் வீணே யாதலின் புதுமைச் சுவடியின் பொருளெலாம் தெளிந்து
 போதல் நன்'றெனப் புகன்றனள் அருண்மொழி;
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | அதூஉம் - அதுவும், சாலும் - பொருந்தும், பூரியர் - கயவர், கொன்னே - வீணாக. |  | 
                  |  |  |  |