|
| சிந்தித் துணர்வார் சிலரினும் சிலரார் | 75 |
| வந்தித் தவ்வுரை வாயென ஏற்பார்; நேரிய நம்சொலைச் சீரிய தன்றெனக் கூறிப் பல்வகைக் குறைகளும் புணர்த்துவர்; | |
| | |
| தமிழிசை தழைக்கும் | |
| | |
| ஆதலின் அன்னாய்! அத்துறை அனைத்தும் | |
| ஏதிலர் தமக்கே இரையா காமல், | 80 |
| தாய்மொழி மானம் தமதென நினையும் ஆய்முறை தெரிந்த ஆன்றோர் தாமும் உயிரெனத் தமிழை உன்னுவோர் தாமும் செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும் | |
| புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்; | 85 |
| தகுந்தோர் புகின்அது தழைத்திடல் ஒருதலை; | |
| | |
| கூத்தும் பரவுக | |
| | |
| கூத்தும் அவ்வணம் கூர்மதி யாளர் காத்துப் போற்றின் கைம்மேற் பலனாம் உயர்தமிழ் மூன்றனுள் ஒன்றென நினையார் | |
| மயலறி வுடையார் மறந்தனர் வெறுத்தனர்; | 90 |
| கல்லா மாந்தர் கையகப் பட்டது; நில்லா தொழிந்தது நீள்புகழ் பட்டது; கற்றோர் பலரும் முற்றுகை யிடின்அது நற்றமிழ் மரபாய் நாட்டினிற் பரவும்; | |
| | |
| அடிகளார் விழைவு | |
| | |
| ஆதலின் அருண்மொழி! அரும்பெறற் பூங்கொடி | 95 |
| ஓதல் வேண்டும் உயர்தமிழ் இசையை; தெருவெலாம் ஊரெலாம் சென்று நாடெலாம் உருகும் இசைத்தமிழ் ஒலித்து முழக்கி வெல்லுதல் ஒன்றே விழைந்தனென்; அதன்றலை | |
--------------------------------------------------------------- |
| வந்தித்து - வணங்கி, வாயென - உண்மையென, புணர்த்துவர் - சேர்ப்பர், ஏதிலர் - பகைவர், செயிர் - குற்றம். | |
| | |