|                   | 17. எழிலிபாற் பயின்ற காதை |  | 
                  |  | 
                  |  | பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல் |  | 
                  |  |  |  | 
                  |  | ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து
 கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை
 நெடுமனை குறுகி நின்றன ளாக
 |  | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி அறிமுகம் |  | 
                  |  |  |  | 
                  |  | `வல்லான் கைபுனை ஓவியம் போலும் | 5 | 
                  |  | நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை? இளங்கொடி யார்நீ?' என்றனள் எழிலி;
 உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை
 அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;
 |  | 
                  |  |  |  | 
                  |  | எழிலி பாடம் பயிற்றல் |  | 
                  |  |  |  | 
                  |  | இசையின் அரசி ஈங்கிவள் விழைவுணர்ந் | 10 | 
                  |  | திசைந்தனள், இசையின் இலக்கண நுணுக்கமும், பாடல் திறனும், பாடும் முறைமையும்,
 ஏடுரை வகையும், இசைத்தொழில் புரிதலால்
 பட்டுணர் அறிவும், பாங்குடன் குழைத்து
 | 
                  |  | மட்டவிழ் கோதை மனங்கொள ஓதினள்; | 15 | 
                  |  |  |  | 
                  |  | இசைக்கருவிப் பயிற்சி |  | 
                  |  |  |  | 
                  |  | குழலும் யாழும் முழவும் முதலாப் பழகும் கருவியின் பான்மையும் பயிற்றினள்;
 மீனவன் சுவடியின் மேம்படு பொருளெலாம்
 ஞானமீ தூர நாள்பல ஆய்ந்து
 |  | 
                  |  | குறைவறத் தெருட்டினள் கொடுமுடி நங்கை; | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | போந்து - சென்று, பட்டுணர் அறிவு - அனுபவ அறிவு, மட்டவிழ் கோதை - பூங்கொடி, மீதூர - மேலும்வளர, தெருட்டினள் - தெரிவித்தனள். |  | 
                  |  |  |  |