|                   | 18. இசைப்பணி புரிந்த காதை |  | 
                  |  | 
                  |  | அருண்மொழி மகிழ்ச்சி |  | 
                  |  |  |  | 
                  |  | எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும்
 பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும்
 விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;
 | 
 | 
                  |  | தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட | 5 | 
                  |  | ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட
 ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;
 |  | 
                  |  |  |  | 
                  |  | எழிலியின் மகிழ்ச்சி |  | 
                  |  |  |  | 
                  |  | இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன் |  | 
                  |  | விசையுறு மரக்கலம் சிதைவுறு காலை | 10 | 
                  |  | விளிவில னாகி மீளுதல் கண்ட காலையின் மிகவே களிகூர்ந் தனளே;
 |  | 
                  |  |  |  | 
                  |  | அடிகள் விழைவு |  | 
        |  |  |  | 
                  |  | குறளகங் கண்ட மலையுறை யடிகள் உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும்
 |  | 
                  |  | நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி | 15 | 
                  |  | `வஞ்சி! தமிழிசை வளர்வான் வேண்டி நிலையம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென்;
 பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்;
 இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர்
 |  | 
                  |  | திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்; | 20 | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | பாரகம் - உலகம், அடங்கலும் - முழுவதும், ஏமுறல் - மகிழ்தல், ஞான்றினும் - பொழுதினும், காலையின் - பொழுதைவிட, பயிலிகள் - பயிற்சியாளர்கள், இசை - புகழ். |  | 
                  |  |  |  |