|                   | 19. கோமகன் மீண்டும் தோன்றிய காதை |  | 
                  |  | 
                  |  | வஞ்சியின் ஏக்கம் |  | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி அளவிலாப் புகழ்நிலை யுறினும் தேங்கெழில் சிதைவுறத் திருமணம் இன்றிக்
 கொஞ்சும் இளமை கொன்னே கழிய
 அஞ்சுபொறி அடக்கிய அறவோர் போல
 | 
 | 
                  |  | நெஞ்செழுங் காதலை நெருப்பினில் பொசுக்கிப் | 5 | 
                  |  | பிஞ்சிற் பழுத்த பேதை ஆயினள்; எவ்வணம் இயம்பினும் எத்துணை மொழியினும்
 செவ்விய அவள்நிலை சிறிதும் பிறழ்ந்திலள்
 என்னே இவள்மனம் இருந்த வாறே!
 |  | 
                  |  | பின்னே வாழ்விற் பேதுறு வாளே | 10 | 
                  |  | எனநினைந் தேங்கி இடருறூஉம் வஞ்சி |  | 
                  |  |  |  | 
                  |  | வஞ்சி தேன்மொழியிடம் புலம்பல் |  | 
                  |  |  |  | 
                  |  | தேன்மொழி யாகிய தெரிவையை விளித்து, `மீன்விழி மாதே! வியனிலத் தியாண்டும்
 இந்நிகர் கொடுமை எவ்வுதி அறிதி?
 |  | 
                  |  | தன்பெருங் கொழுநன் தனிமகன் வடிவேல் | 15 | 
                  |  | வன்புடை வஞ்சரால் மாய்ந்தன னாக என்னொரு திருமகள் எழிலுறும் அருண்மொழி
 மாயாத் துயரால் மாழ்குதல் கண்டு
 வீயாத் துன்புள் வீழ்ந்தேன்; என்மகள்,
 |  | 
                  |  | ஓயாக் கவலை ஒழிப்பான் வேண்டித் | 20 | 
                  |  | தேயாப் பெருமனைச் செல்வமும் வாழ்வும் மறந்தன ளாகி மலையுறை யடிகள்
 திருந்திய குறளகம் சேர்ந்தனள்; என்னுளம்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | கொன்னே - வீணே, அஞ்சுபொறி - ஐந்துபுலம், மாழ்குதல் - வருந்துதல், ஒழிப்பான் - ஒழிக்க. |  | 
                  |  |  |  |