|                   | 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை |  | 
                  |  | 
                  |  | கோமகன் வஞ்சினம் |  | 
                  |  |  |  | 
                  |  | கலங்கிய கோமகன் கனலும் நெஞ்சினன் இலங்கிழை நல்லாள் எழில்விழிப் பூங்கொடி
 சொல்லிய மாற்றம் சுடுநெருப் பாகிக்
 கொல்லுவ தென்னக் கொடுந்துயர்ப் படுத்தப்
 | 
 | 
                  |  | பொறாஅ மனத்தினன், புந்தி மயங்கி | 5 | 
                  |  | மறாஅ மனத்தொடு மணங்கொள இயைவள் எனாஅ நினைந்தேன் எற்பழித் தொதுக்கினள்;
 தருக்கிய பூங்கொடி செருக்கினை யடக்கி
 வருத்துமவ் வொருத்தியை வாழ்க்கைத் துணையெனக்
 |  | 
                  |  | கொள்ளா தொழியேன் என்றுளங் கொளீஇச் | 10 | 
                  |  | செல்லா நின்றனன்; சென்றவன் ஒருநாள் |  | 
                  |  |  |  | 
                  |  | சண்டிலியை வேண்டல் |  | 
                  |  |  |  | 
                  |  | சண்டிலி தன்பாற் சார்ந்தனன் குறுகிக் கண்டினை நிகரிசை கைவல பூங்கொடி
 விண்டுரை யாடிய வெந்துயர்க் கொடுமொழி
 |  | 
                  |  | தண்டா துரைத்துத் `தையாஅல் அவள்மணங் | 15 | 
                  |  | கொண்டா லன்றிக் கொண்டுயிர் வாழேன்; சிறுமகள் அவளுழைச் செலீஇய என்னுளம்
 பெறுவழி யறியாது பேதுறு வேனைக்
 காத்தல் நின்கடன், கடிமணங் கொள்ளப்
 |  | 
                  |  | பூத்தநல் லிளங்கொடி புந்தியை மாற்றி | 20 | 
                  |  | என்பாற் படுத்'தென இரந்துரை கூறினன்; |  | 
                  |  |  |  | 
                  |  | சண்டிலி இடித்துரை |  | 
                  |  |  |  | 
                  |  | `பெண்பாற் குழலும் பெரியோய்! திருமணம் |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | பொறாஅ - பொறுக்காத, மறாஅ - மறுக்காத, எனாஅ - என்று, கொளீஇ - கொண்டு, தையாஅல் - சண்டிலியே, செலீஇய - சென்ற. |  | 
                  |  |  |  |