|
| துன்றுநல் லன்பால் தூயவள் வருகையை விழைந்தன ராகி விடுத்தனர் ஓலை; | |
| குழைந்துளம் உருகிஅக் குலக்கொடி இயைந்து | 160 |
| | |
| மாளிகைக் காட்சி | |
| | |
| வருவோள் நீளுயர் மாமதில் வாயில் மருவா நின்றவ் வழியுட் புகுமவள் பட்டின் இயன்ற பசும்படாம் போர்த்தென வெட்டுறும் பசும்புல் விரிதரை கண்டும், | |
| புற்றரை அதனிடைப் பொலிவுற விளங்கிடும் | 165 |
| சிற்றுளி வல்லான் செய்வினை முற்றிய கற்சிலை ஆங்காங்கு அமைந்தன கண்டும், காண்பார் மருளக் கைவலான் இயற்றிய மாண்பார் சுதையின் பாவைகள் கண்டும்; | |
| எழுப்பிய சுவரென எண்ணிட இருபுறம் | 170 |
| செழித்தவை ஒழுங்குறத் தறித்திடும் செடிகள் வரிசையின் அமைந்த வனப்பினைக் கண்டும்; சுரும்பினம் விரும்பா அரும்புகள் மிடைந்திட நரம்பின் இசைஎன முரலும் வண்டினம் | |
| முந்துற மொய்த்து நறுந்தேன் முகக்கப் | 175 |
| பந்தியின் அமைந்த பல்வகை மலர்கள் வியன்மணம் பரப்பி விரிந்துள கண்டும்; கயல்மீன் பிறழ்ந்து கள்ளவிழ் மலர்மிசைத் துயிலுவ தென்னக் கிடந்துபின் துள்ளிப் | |
| புனலிடை மீண்டும் புகுந்து திரியும் | 180 |
| செய்குள மாகிய பொய்கை கண்டும் நெய்யும் வினைஞர் நேர்த்தியின் இழைத்த நூலின் இழையினும் நுண்கொடி படர்ந்து நாலும் பந்தரின் நன்னலங் கண்டும், | |
--------------------------------------------------------------- |
| கைவலான் - வல்லவன், தறித்திடும் - வெட்டிவிடப்பட்ட, முரலும் - ஒலிக்கும், நாலும் - தொங்கும். | |
| | |