|  | 
                  |  | 
                  |  | சண்டிலியின் கணவன் வருகை |  | 
                  |  |  |  | 
                  |  | மழைவளர் சாரல் மாமலைப் பொதியில் குழலின் இனிய குரலிசை கேட்டுத்
 தன்வய மிழந்து தமிழிசை வேட்டுப்
 பயிலும் ஆர்வம் மீக்கூர் பாவை
 | 
 | 
                  |  | அயில்வேல் விழியள் மயிலியள் சண்டிலி | 5 | 
                  |  | பிரிவினைப் பொறாஅன் பேதையின் கணவன் துருவன் என்பான் தோகையைக் காணும்
 ஆர்வல னாகி அணிதிகழ் மாடஞ்
 சேர்தரு மறுகுகள் செறிந்தெழில் விளங்கும்
 |  | 
                  |  | வேங்கை நகரெனும் வியனகர் புகுந்தோன், | 10 | 
                  |  | ஆங்கண் ஓங்கிய அகல்வாய் மாளிகை வதியிடன் குறுகிஅம் மங்கையைக் கூடிப்
 புதுமகிழ் வெய்திப் பூரிப் புற்றனன்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | சண்டிலி நிகழ்ந்தன கூறல் |  | 
                  |  |  |  | 
                  |  | ஓதும் பொருட்டாற் காதலற் பிரிந்த |  | 
                  |  | மாதும் கொழுநன் வரவால் தழைத்த | 15 | 
                  |  | நெஞ்சினள் அவற்கு நிகழ்ந்தன கூறுவோள் பஞ்சியின் மெல்லடிப் பாவை பூங்கொடி
 வஞ்சியின் அருளால் வளர்தமி ழிசையில்
 விஞ்சிய புலமை விளங்கிடப் பெற்றதூஉம்,
 |  | 
                  |  | பயிற்றிய பூங்கொடி பழகிய முறையதூஉம், | 20 | 
                  |  | செயற்றிறம் பழுநியோள் செம்மனத் தொண்டும் பண்பும் அன்பும் பண்ணிசைத் திறனும்
 மன்பதை உரைபுகழ் மாண்பும் பிறவும்
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | மீக்கூர் - மேம்பட்ட, பொறா அன் - பொறுக்கமாட்டாதவன். பழுநியோள் - முதிர்ந்தவள், மன்பதை - மக்கள். |  | 
                  |  |  |  |