பக்கம் எண் :

கோமகன் கொலையுறு காதைபக்கம் : 171

 
  தன்மனம் முகிழ்த்த தணியாக் காதலை
எவ்வணம் மறைத்தனள், இளையோள் வியப்பே;'
இவ்வணம் நினைந்துளங் கவ்விய மகிழ்வால்
 
  உட்புகுந் தாங்கண் ஒருத்தியைக் கண்டனன் 155
  வெட்கினன் வியர்த்தனன் விழித்தனன் துடித்தனன்
மட்கிய முகத்தினன் வாயிதழ் மடித்தனன்
செய்வதொன் றறியான் சிலைபோல் நின்றனன்;
 
     
 

துருவன் ஐயப்பாடு

 
     
  மைமன முடையான் மதியிலி நிழல்போல்  
  தொடர்ந்து பின்வரும் துருவன், அவ்விடை 160
  இடம்படும் அறையுள் இளையோன் புகுதக்
கண்டோன் ஐயமும் கடும்படர் சினமும்
கொண்டோ னாகிக் கொடுவரி நிகர்த்துக்
கதவிடை ஒருபாற் கரந்தனன் நிற்க;
 
     
 

எழுந்தவள் சீற்றம்

 
     
  மதர்விழி மாதவள் மலரணை விடுத்தே 165
  ஒய்யென எழுந்தவள் ஒளிமுகஞ் சிவந்து
கைதவன் நிற்றலைக் கண்டுளஞ் சினந்து
`விழையா மகளை விழையா நின்றனை,
இழிவாம் இச்செயல் இயற்றிடத் துணிந்தனை.
 
  நாணா மதியினை நங்கையர் வாழ்வில் 170
  மாணா வினைசெய மனங்கொண் டனை,நீ
பொருந்தாக் காமம் பொருந்தா தென்று
திருந்தா வுனக்குச் செப்பிய வெல்லாம்
மறந்தாய் கொல்லோ? மதர்த்தனை கொல்லோ?
 
  இரவிடை ஒருமகள் தனியிடன் குறுகக் 175
  கரவுளங் கொண்ட காமுகன் நீதான்
உரமிக வுடையாய்! ஒண்டொடி மாதர்
 

---------------------------------------------------------------

  மட்கிய - மங்கிய, மைமனம் - குற்றமுள்ள மனம், கொடுவரி - புலி, கரந்தனன் - மறைந்து, கைதவன் - ஒழுக்கம்கெட்டவன்.