|  | 
                  |  | 
                  |  | பூங்கொடி வருதல் |  | 
                  |  |  |  | 
                  |  | பெருநிலக் கிழவர் பெட்புடன் மகிழ்ந்தே அருளிய வாழ்த்தும் அவ்வூர் நாப்பண்
 ஞாலங் காணாக் கோலங் கொண்ட
 நூலகம் அமைக்க நுவல்மொழி உறுதியும்
 | 
 | 
                  |  | பெற்றநற் பூங்கொடி குற்றமில் மனத்துள் | 5 | 
                  |  | உள்றெழு மகிழ்வால் சொற்றமிழ் இசைதரு மாட மாளிகை மன்றினும் புகுதரக்
 கூட வாயிலில் குருதி கண்டனள்;
 |  | 
                  |  |  |  | 
                  |  | பூங்கொடி மயக்கம் |  | 
                  |  |  |  | 
                  |  | கண்டவள் நடுங்கிக் கால்தடு மாறிச் |  | 
                  |  | `சண்டிலி சண்டிலி' என்றுரை சாற்றியும் | 10 | 
                  |  | கண்டிலள் அவளைக் கடும்பே ரமைதி கொண்டு திகழ்ந்தது கோவுயர் மாளிகை;
 அஞ்சிய ஒண்டொடி ஆங்காங் கோடித்
 துஞ்சுவள் அவளெனத் துருவினள் யாண்டும்
 |  | 
                  |  | காண்கில ளாகிக் கலங்கிய அம்மகள் | 15 | 
                  |  | தூண்களி னிடையே துணுக்குற நோக்கினள்; மணமக னாகும் மனத்தொடு வந்தோன்
 பிணமக னாகிப் பிறிதுறக் கிடந்த
 கொடுமை காணலுங் கோவெனக் கதறிச்
 |  | 
                  |  | சுடுதழல் மிதித்தெனத் துவண்டு சுருண்டு | 20 | 
                  |  | மயங்கி விழுந்தனள் மண்மிசை யாங்கே; |  | 
                  |  |  |  | 
                  |  | மயக்கந் தெளிந்து புலம்பல் |  | 
                  |  |  |  | 
                  |  | மயங்கிருள் தெளிய வைகறை வந்துற வயங்கிணர்க் கொடிநிகர் மயங்கிய பூங்கொடி
 சற்றே தெளிவுறச் சட்டென எழுந்து
 |  | 
                  |  | 
                  |  |  |  |