| 26. யாழ்நூல் பெற்ற காதை | 
                  |           வைகறைப்           பொழுது | 
                  |  | 
                  |   | புலர்பொழு தத்து மலர்முகம் தோய்ந்து வருமிள மென்கால் வரவுரை கூறக்
 குறுமுகை தாங்கும் கொடியினம் பலவுடன்
 சிறுநகை காட்டிச் செடியசைந் தாடத்
 |  | 
                  |  | தளிர்பசும் புற்றலை தண்சிதர் உறைப்ப | 5 | 
                  |  | நளிமலர் தோறும் நடம்புரி சுரும்பினம் பலபல தொக்குப் பண்ணொலி மிழற்றப்
 பலர்தொழ வரூஉம் பரிதியஞ் செல்வன்
 விரிகதிர் நீட்டி விண்வெளி விளக்கச்
 |  | 
                  |  |  |  | 
                  |  | கோட்டை நகரில் தங்குதல் |  | 
                  |  |  |  | 
                  |  | செறிதொடி அருண்மொழி சுரிகுழற் பூங்கொடி | 10 | 
                  |  | தொடர்ந்துடன் பின்வரத் தொழுதகும் அடிகளும் படர்ந்தெழும் அன்பால் பழுநிய கிழாஅரும்
 கோட்டை நகரினைக் கூடின ராகிக்
 கோட்டமில் மனத்தர் கோனூர் வள்ளல்
 |  | 
                  |  | வீட்டினில் விருந்தாய் வேட்டுடன் புக்கனர்; | 15 | 
                  |  |  |  | 
                  |  | கோனூர் வள்ளலொடு கலந்துரையாடல் |  | 
                  |  |  |  | 
                  |  | புக்கவர் தம்மைப் பொலிமுகங் காட்டித் தக்க இன்னுரை தந்துளம் மலர்ந்து
 மிக்க மகிழ்வால் மேம்படு வள்ளல்
 வருக வருகென வரவுரை கூறி
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | மென்கால் - தென்றல், குறுமுகை - சிறுமொட்டு, சிதர் - துளிகள், உறைப்ப - சிதற,           கரும்பினம் - வண்டுக்கூட்டம், தொக்கு - கூடி, மிழற்ற - இசைக்க, சுரிகுழல் - சுருள்           கூந்தல், கிழாஅரும் - பெருநிலக்கிழாரும், கோட்டமில் - வங்சனை இல்லாத, வேட்டு           - விரும்பி. |  | 
                  |  |  |  |