| 30. சிறையகம் புகுந்த காதை | 
                  | ஊரவர் உரையாடல் | 
                  |  | 
                  |   | தாய்கை விலங்கைத் தறிப்பான் வேண்டித் தங்கை விலங்கைத் தாங்கினர் செல்வோர்
 அஞ்சில ராகி அகமுகம் மலர்ந்து
 நெஞ்சுரம் ஏறி நிமிர்ந்தநன் னடையராய்ப்
 |  | 
                  |  | போதல் கண்ட பொன்னகர் மாந்தர் | 5 | 
                  |  | வீதியின் மருங்கில் வெற்றிப் பேரொலி ஆர்த்தனர் ஒருசிலர்; அவர்புகழ் கண்டுளம்
 |  | 
                  |  | 
                  |  | அறப்போர் நாடகம் |  | 
                  |  |  |  | 
                  |  | வேர்த்தவர் சிலர் `இது வீண்படு முயற்சி இவரால் தமிழ்மொழி ஏற்றம் உறுமோ?
 |  | 
                  |  | எவரால் தமிழுக் கிடுக்கண் நேர்ந்தது? | 10 | 
                  |  | தவறே எண்ணித் தம்பெயர் ஒளிர அறப்போர் நாடகம் ஆடினர்' என்றெலாம்
 பரப்பினர் பழிமொழி பண்பிலாத் தொழிலினர்;
 |  | 
                  |  | 
                  | வென்றிப் போர் | 
                  |  | 
                  |  | நெடும்புகழ்த் தமிழ்மொழி நீணிலத் தோங்கக் |  | 
                  |  | கடமுணர் இவரே காத்திட வல்லார்! | 15 | 
                  |  | அடவோ இவர்தம் அரும்பெரும் முயற்சி கெடுமோ? இங்குக் கிளைபோற் புகுமொழி
 தடுத்து நிறுத்தத் தக்கார் யாருளர்?
 அடுத்த துயரெலாம் அகமகிழ் வுடனே
 |  | 
                  |  | மடுத்துத் தந்நலம் விடுத்தனர் ஆஆ! | 20 | 
                  |  | தொடுக்குமிவ் வறப்போர் கொடுக்கும் வென்றியே' என்றநல் லுரைகளும் இடையிடை மிடைந்தன;
 |  | 
                  |           --------------------------------------------------------------- | 
                  |  | தங்கை - தம்கை; ஒளிர - விளங்க, கடம் - கடமை, வென்றி - வெற்றி,           மிடைந்தன - கலந்தன. |  | 
                  |  |  |  |