| 2. பழியுரை காதை |
| வஞ்சியின் கவலை |
| |
| | முத்தமிழ் காக்கும் முதற்பணி பூண்ட நத்தும் வடிவேல் நன்மணம் புணர்ந்த பத்தினித் தெய்வம் பாங்குயர் அருண்மொழி இத்தரை உய்ய ஈன்றருள் மகளாம் | |
| | தத்தை பூங்கொடி தாயொடு மங்கலத் | 5 |
| | தைத்திரு நாளில் தமிழிசை வழங்க வாராத் துயரால் மயங்கிய வஞ்சி சோரா நின்றனள்; தன்மகட் டோழி தேன்மொழி யைக்கூஉய்த் திருநகர் கூறும் | |
| | தீமொழி அருண்மொழிக் குரையெனச் செப்பினள்; | 10 |
| | | |
| | தேன்மொழி செல்லல் | |
| | | |
| | அவ்வுயிர்த் தோழியும் அருண்மொழி நிலைக்கு வெவ்வுயிர்த் தேங்கும் வினையினள் ஆதலின் பூங்கொடி தன்னோ டருண்மொழி வைகும் பாங்குடை இல்லிற் புகுந்தனள் பாங்கி; | |
| | அருண்மொழி மேனி அழிநலங் கண்டு | 15 |
| | மருண்மனங் கொண்டு `மங்காய்! நின்னை இவ்வூர் மாக்கள் இகழ்ந்துரை கூறினர்; | |
| | | |
| | அருண்மெழியின் இசைப்புலமை | |
| | | |
| | செவ்விய இசைநூல் இவ்வுல குள்ளன அவ்வள வும்பயில் அறிவினள்; பிறமொழி | |
| | இசைபல முயன்று வசையற வுணர்ந்து | 20 |
| --------------------------------------------------------------- |
| | கூஉய் - அழைத்து, வைகும் - தங்கும், மருள் - மயக்கம், மாக்கள் - மக்கள் | |
| | | |